Monday 6th of May 2024 01:46:29 PM GMT

LANGUAGE - TAMIL
-
எஸ்.பி.பி. உடல் நிலை 48 மணி நேரங்களாக  சீராக உள்ளதாக மகன் அறிவிப்பு

எஸ்.பி.பி. உடல் நிலை 48 மணி நேரங்களாக சீராக உள்ளதாக மகன் அறிவிப்பு


பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கடந்த 48 மணி நேரங்களாகச் சீராக உள்ளதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் இன்றிரவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

தனது இன்ராகிராம் சமூக வளைத்தளத்தில் அவா் இந்தத் தகவலைப் பதிவு செய்துள்ளார்.

இது நல்ல அறிகுறி. எல்லோருடைய அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றி எனவும் அதில் எஸ்.பி.பி.சரண் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கடந்த 5-ஆம் திகதி முதல் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் அவரது உடல் நிலை மோசமடைந்தபோதும் நேற்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது உடல்நிலை சீராக உள்ளது. வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Category: சினிமா, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE